அரசு பள்ளியில் கற்றல் திருவிழா| Dinamalar

பாகூர், :மதிக்கிருஷ்ணாபுரம் அரசு தொடக்கப் பள்ளியில், மாணவர்களின் கற்றல் திறனை வெளிப்படுத்தும் விதமாக, வாசித்தல் திருவிழா நடந்தது.தலைமையாசிரியர் செல்வராஜ் வரவேற்றார். வட்டம் -3 பள்ளி துணை ஆய்வாளர் பக்கிரிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விழாவை துவக்கி வைத்து மாணவ மாணவிகளின் கற்றல் மற்றும் வாசித்தல் திறனை ஆய்வு செய்து சிறப்புரையாற்றினார். ஆசிரியைகள் கவுரி, விமலா, அபிநயா, செல்வி, உமாசாந்தி, கலையரசி ஆகியோர் மாணவ மாணவிகளை வழி நடத்தினர். நிகழ்ச்சியில், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.