கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை.!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலியில் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொற்று பாதிப்பு குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை மறுநாள் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த நிலையில், தமிழகத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசித்த முதலமைச்சர், கடந்த ஒரு வாரத்தில் டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்திருப்பதால், ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை எடுத்து தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், பொருளாதார வளர்ச்சி தடைப்பட்டு விடாமலும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமலும் பைன் பேலன்ஸ் எனப்படும் சமநிலையாக முடிவெடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.