’சூரரைப் போற்று’ இந்தி ரீமேக் துவக்கம்: அக்‌ஷய் குமாரை வாழ்த்திய தயாரிப்பாளர் சூர்யா

இந்தியில் ரீமேக்காகும் ’சூரரைப் போற்று’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

கடந்த 2020 ஆம் ஆண்டு சூர்யா – அபர்ணா பாலமுரளி நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் தீபாவளியையொட்டி ஓடிடியில் வெளியான ‘சூரரைப் போற்று’ பெரும் வெற்றி பெற்றது. கேப்டன் ஜி.ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றில் சில பகுதிகளை எடுத்துக்கொண்டு படமாக்கினார் சுதா கொங்கரா. ஏற்கனவே பல்வேறு விருதுகளையும் ஆஸ்கர் வரையும் சென்று ’சூரரைப் போற்று’ பாராட்டுக்களைக் குவித்தது. சுதா கொங்கராவின் அடுத்தப் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இந்தியில் ‘சூரரைப் போற்று’ படத்தை அவரே இயக்கப்போகிறார் என்று கடந்த ஆண்டு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால், சூர்யா கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார்கள் என்பதை தெரிவிக்கவில்லை.

image

இந்த நிலையில், அக்‌ஷய் குமார் சூர்யா நடித்த மாறன் கதாபாத்திரத்தில் இந்தியில் நடிக்கிறார். இன்று மும்பையில் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்தியிலும் சுதா கொங்கரா இயக்க ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். சூர்யா,ஜோதிகா, அபடண்ட்ஷியா எண்டர்டைன்மெண்ட் உள்ளிட்டவர்கள் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்தி ரீமேக் படப்பிடிப்பின் பூஜைக்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே சூர்யா மும்பை சென்றார். அவர் மும்பையில் இருக்கும் புகைப்படங்களும் வைரலானது. இந்த நிலையில் இன்று அக்‌ஷய் குமாருடன் இருக்கும் புகைப்படத்தினை “புதிய துவக்கம். உங்கள் வாழ்த்துகளுடன் ஆசிர்வாதங்களுடன்” என்று பெருமையுடன் சூர்யா பகிர்ந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருக்கிறார். அபர்ணா பாலமுரளி கதாபாத்திரத்தில் ராதிகா மதன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.