பிரதமர் மோடியுடன் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா சந்திப்பு.!

பிரதமர் மோடியும், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலாவும் டெல்லியில் சந்தித்துப் பேசியபோது, ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வணிகம் மற்றும் தொழில்நுட்பக் கவுன்சிலை அமைக்க ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்தியாவுக்கு வந்துள்ள உர்சுலா டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது இருதரப்பு உறவின் முன்னேற்றம் பற்றிப் பேசியதுடன், வணிகம், பருவநிலை மாற்றம், டிஜிட்டல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உடன்பாட்டை எட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை அமெரிக்காவுடன் மட்டும் வணிகத் தொழில்நுட்பக் கவுன்சிலைக் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம், இரண்டாவதாக இந்தியாவுடனும் அத்தகைய கவுன்சிலை அமைக்க உள்ளதாக உர்சுலா தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.