அடிக்கடி பழுதான எலக்ட்ரிக் ஸ்கூட்டி.. பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மருத்துவர்.!

எலக்ட்ரிக் ஸ்கூட்டி அடிக்கடி பழுதானதால் உரிமையாளர் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் பிரித்திவிராஜ். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எலக்ட்ரிக் பைக் ஒன்றை வாங்கியுள்ளார். அதற்குள் 3 முறை பழுதாகி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஒரு முறை பேட்டரியை சார்ஜ் செய்தால் 120 முதல் 150 கிலோ மீட்டர் வரை போகும் என்று நிறுவனம் கூறியிருந்த நிலையில், இன்று 44 கிலோ மீட்டர் சென்று பாதிவழியில் நின்றதால் ஆத்திரமடைந்த மருத்துவர் வாகனத்தை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.