திருவண்ணாமலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வகுப்பறையில் +2 மாணவர்கள் ராகிங் செய்ததாக எழுந்த புகாரில் 5 மாணவர்கள் சஸ்பெண்ட்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வகுப்பறையில் +2 மாணவர்கள் ராகிங் செய்ததாக எழுந்த புகாரில் 5 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

செங்கம் அரசு பள்ளியின் வகுப்பறையிலேயே மாணவர்கள் சிலர், சக மாணவர்களை மேசை மீது நடனம் ஆட வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட வைத்ததுடன், அவ்வாறு செய்யாதவர்களை அடித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை மாணவர் ஒருவர் செல்போனில் பதிவு செய்ததாக சொல்லப்படும் நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தபட்ட 5 மாணவர்களை சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.