மேலும் 16 யூடியூப் சேனல் முடக்கம்

புதுடெல்லி: தவறான தகவல் பரப்பிய 16 யூடியூப் சேனல்களை முடக்கி ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பாக தவறான தகவல்களை பரப்பும் யூடியூப் சேனல்களை ஒன்றிய அரசு முடக்கி வருகிறது. சமீபத்தில் 22 யூடியூப் செய்தி சேனல்கள் முடக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு செயல்படும் 6 சேனல்கள் மற்றும் பேஸ்புக் கணக்கு உட்பட 16 யூடியூப் சேனல்களை ஒன்றிய அரசு நேற்று முடக்கி உத்தரவு பிறப்பித்தது. ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முடக்கப்பட்ட யூடியூப் சேனல்கள் மற்றும் பேஸ்புக் கணக்குகள் நாட்டில் பீதியை உருவாக்கவும், பிரிவினையை தூண்டவும், பொது ஒழுங்கை சீர்குலைக்கவும் பொய்யான, சரிபார்க்கப்படாத தகவல்களை பரப்பிவருகின்றன. மேலும் தகவல் தொழில்நுட்ட விதிகள் 2021ன் விதி 18ன் கீழ் தேவைப்படும் தகவல்களை அமைச்சகத்திற்கு அவை வழங்கவில்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.