எனக்கு இரண்டாவது கல்யாணமா?: நடிகை விளக்கம்

பிரபல மலையாள பாடகியும், நடிகையுமான
ரிமி டாமி
தன் கணவரை பிரிந்து வாழ்கிறார். திருமணமாகி 11 ஆண்டுகள் கழித்து கணவரை பிரிந்துவிட்டார்.

இந்நிலையில் ரிமி டாமி மீண்டும்
திருமணம்
செய்து கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகி தீயாக பரவியது. அவரின் வருங்கால கணவர் திரையுலகில் மிகவும் பிரபலமானவர் என்று பேச்சு கிளம்பியது.

திருமண பேச்சு குறித்து தன் யூடியூப் சேனலில் ரிமி டாமி கூறியிருப்பதாவது,

கடந்த இரண்டு நாட்களாக எனக்கு பலர் போன் செய்கிறார்கள். ரிமி உனக்கு திருமணமா என்று அனைவரும் கேட்கிறார்கள். அப்படி எல்லாம் எதுவும் இல்லை.

இது போன்ற தகவல் ஏன் வெளியானது என்றே தெரியவில்லை. என்னை கேட்காமலேயே ஆளாளுக்கு நியூஸ் கொடுக்கிறார்கள்.

அந்த செய்தியில் உண்மை இல்லை. எனக்கு திருமணம் எல்லாம் இல்லை. என்னை இப்படியே வாழவிடுங்கள். அப்படி ஏதாவது ஸ்பெஷல் இருந்தால், நானே சொல்கிறேன். அதுவரை எதையும் நம்ப வேண்டாம்.

தொடர்ந்து போன் கால்கள் வருவதால் தான் வீடியோ வெளியிட்டு உண்மையை சொல்லலாம் என்று நினைத்தேன் என்றார்.

ரிமியை பிரிந்த இரண்டு ஆண்டுகளில் அவரின்ன முன்னாள் கணவர் ராய்ஸ் மறுமணம் செய்து கொண்டார்.

Nayanthara:உண்மை புரிந்து தான் நயன்தாரா ஒதுங்கிட்டாரா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.