தமிழக தேர்த்திருவிழாவில் அதிர்ச்சி சம்பவம்! 10பேர் பலியாகினர்(Photo)


தமிழகம் -தஞ்சாவூர் அருகில் இடம்பெற்ற தேர்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கம் காரணமாக 10 பேர் பஉயிரிழந்துள்ளனர்.

களிமேடு அப்பர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம், 94-வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று நள்ளிரவு தொடங்கி நடைபெற்று வந்தது.

இதன்போது  தஞ்சாவூர் பூதலூர் சாலையில் உயர் மின்அழுத்த கம்பியுடன் தேர் உரசியபோதே மின்சார தாக்கம் ஏற்பட்டது.

சம்பவ இடத்திலேயே 10பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் தஞ்சை அரச மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.