நாக்கிலே கேசரி மட்டும் சொல்லலாமா.?: அஜய் தேவ்கனை வச்சு செய்யும் நெட்டிசன்கள்.!

கேஜிஎஃப்-2 படத்தின் வெற்றி குறித்து பட விழா ஒன்றில் பேசிய கன்னட நடிகர்
கிச்சா சுதீப்
, இனிமேலும் இந்தி மொழியை தேசிய மொழி என சொல்ல வேண்டாம் எனக் கூறியிருந்தார். அவரின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்த்தார்
அஜய் தேவ்கன்
. பதிலுக்கு சுதீப்பும் ஒரு பதிவு போட, இந்த விவகாரம் தற்போது சூடு பிடித்துள்ளது.

பட விழா ஒன்றில் பேசிய கிச்சா சுதீப், ‘ஒரு கன்னட படம் பான்-இந்தியா படமாக எடுக்கப்பட்டது என்று எல்லோரும் கூறுகிறார்கள், ஆனால் ஒரு சிறிய திருத்தம், இந்தி இனி தேசிய மொழி அல்ல. பாலிவுட்டும் பல பான்-இந்தியா படங்களைத் தயாரிக்கிறது. அவை தெலுங்கு மற்றும் தமிழில் வெளியிடப்படுகின்றன. ஆனால் வெற்றி பெற போராடுகின்றன. இன்று நாம் எங்கு வேண்டுமானாலும் ஓடக்கூடிய படங்களைத் தயாரித்து வருகிறோம்’ என்றார் சுதீப்.

இதனை தொடர்ந்து கிச்சா சுதீப்பை டேக் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் அஜய் தேவ்கன், ‘உங்களை பொறுத்தவரையில் இந்தி தேசிய மொழி இல்லை என்றால், ஏன் உங்கள் தாய் மொழி படங்களை இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள்? எப்போதும் இந்தி தான் நமது தாய் மொழியாகவும் தேசிய மொழியாகவும் இருக்கும்’ என்று குறிப்பிட்டார். இந்த பதிவை அவர் இந்தியில் பதிவிட்டதும் கடும் சர்ச்சைகளை கிளப்பியது.

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் மரண மாஸ் அப்டேட்: தரமான சம்பவம் இருக்கு.!

அஜய் தேவ்கனின் பதிவிற்கு பதிலளித்த கிச்சா சுதீப், “நீங்கள் இந்தியில் அனுப்பிய பதிவு எனக்கு புரிந்தது. நாங்கள் அனைவரும் இந்தி மொழியை நேசித்து கற்றுக்கொண்டோம். தவறொன்றும் இல்லை சார். ஆனால் உங்கள் கேள்விக்கு எனது பதிலை கன்னட மொழியில் பதிவு செய்திருந்தால் நிலைமை என்னவாகும் என்று யோசித்தேன். நாங்களும் இந்தியாவை சேர்ந்தவர்கள் அல்லவா” என பதிவிட்டார்.

அதன்பின்னர், இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அஜய் தேவ்கன், வணக்கம் சுதீப், நீங்கள் ஒரு நண்பர். தவறான புரிதலை சரி செய்தமைக்கு நன்றி. நான் எப்போதும் சினிமா துறையை ஒன்றாகத்தான் நினைக்கிறேன். நாங்களும் எல்லா மொழிகளையும் மதிக்கிறோம், எங்கள் மொழியையும் அனைவரும் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஒருவேளை, மொழிபெயர்ப்பில் ஏதோ குறை இருந்திருக்கலாம்’ என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து பலரும் அஜய் தேவ்கனை கடுமையாக விளாசி வருகின்றனர். சமீபகாலமாக வேற்று மொழி படங்கள் பாலிவுட்டில் வசூலை குவித்து வருவதால் ஏற்பட்ட கடுப்பே இது என்றும், சிங்கம், த்ரிஷ்யம் படங்களை ரீமேக் செய்து பாலிவுட்டில் ஹிட் கொடுத்துவிட்டு இப்போது எங்கள் மொழியில் ஏன் ரீமேக் செய்கிறீர்கள் என கேட்கலாமா? என்றும் விளாசி வருகின்றனர் நெட்டிசன்கள். மேலும் குட்கா விளம்பரத்தில் ‘நாக்கிலே கேசரி’ என தமிழில் டப்பிங் பேசும் போது மட்டும் நல்லா இருந்ததா? என்றும் வெளுத்து வாங்கி வருகின்றனர் இணையத்தளவாசிகள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.