டேராடூன்-உத்தரகண்டின் தாதா ஜலல்பூர் கிராமத்தில், ஹிந்து அமைப்புகளின் மாநாடு நடக்காமல் இருக்க, நேற்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
உத்தரகண்டில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஹரித்வாரில், கடந்த டிசம்பரில் நடந்த ஹிந்து அமைப்புகளின் மாநாட்டில், மாற்று மதத்தினர் மீது வெறுப்புணர்வை துாண்டும் வகையில், அதன் தலைவர்கள் பேசியது சர்ச்சையானது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாட்டில் வெறுப்புணர்வை துாண்டும் வகையில் பேசும் நிகழ்வுகள், தொடர்வது குறித்து வருத்தம் தெரிவித்தது.தாதா ஜலல்பூர் கிராமத்தில், நேற்று நடக்க இருந்த ஹிந்து அமைப்புகளின் மாநாட்டில், இதுபோன்ற பேச்சுகள் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்தவும், உத்தரகண்ட் மாநில தலைமை செயலருக்கு அறிவுறுத்தியது.
இந்நிலையில், அந்த மாநாடு நடக்காமல் இருக்க, தாதா ஜலல்பூரில், நேற்று, 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மாநாட்டை ஏற்பாடு செய்திருந்த 33 பேரை, போலீசார் கைது செய்தனர்.
Advertisement