இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வர முயன்ற 13 பேர்.. படகுக்கு காத்திருந்த போது கைது செய்தது இலங்கை கடற்படை..!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வர முயன்ற 13 இலங்கை தமிழர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், உணவுப் பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக இங்கையில் வசிக்கும் தமிழர்கள் கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சமடைந்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்றிரவு இலங்கையின் திரிகோணமலையில் வசித்த 3 குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் தங்களது சொத்துக்களை விற்று அதில் கிடைத்த பணத்தை வைத்து ராமேஸ்வரத்தின் தனுஷ்கோடிக்கு வருவதற்காக, காங்கேசன் துறை கடற்கரையில் படகுக்கு காத்திருந்த போது அவர்களை கைது செய்த இலங்கை கடற்படை, காங்கேசன் துறை போலீசாரிடம் ஒப்படைத்தது.

இலங்கையில் இருந்து இதுவரை தமிழகத்திற்கு 75 பேர் அகதிகளாக வந்திருக்கும் நிலையில், இவர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.