உக்ரைன் – ரஷ்யா போர் உலகளாவிய பிரச்சனை.. ரஷ்யா போர் தொடுப்பால் மனித பேரழிவு ஏற்பட்டுள்ளது – அதிபர் ஜோ பைடன்!

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் உலகளாவிய பிரச்சனை எனக் குறிப்பிட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தோ – பசிபிக் அமைப்பைச் சேர்ந்த நாடுகள் பொறுப்பை ஏற்று வழிநடத்தும் என தெரிவித்தார்.

குவாட் உச்சி மாநாட்டில் பேசிய பைடன், ஜனநாயகத்திற்கும், எதேச்சதிகாரத்திற்கும் உள்ள வித்தியாசத்தை சுட்டிக்காட்டினார்.

ரஷ்யா, உக்ரைன் உடனான போரை தொடரும் வரை  இந்தோ-பசிபிக் நாடுகள் உலகளவில் பொறுப்புகளை ஏற்று வழிநடத்தும் என குறிப்பிட்டார்.

ரஷ்யாவின் போர் நடவடிக்கை மனித பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாகவும், அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பைடன் கருத்து தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.