தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நாளையுடன் நிறைவு!

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவு பெறுகிறது.

இலவசக் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25% இடங்களில் ஏழை, எளிய மாணவர்கள் இலவசமாக சேர்க்கப்படுவார்கள்.

நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப்பதிவு கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில், இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

ஒரு பெற்றோர் தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம் என தனியார் பள்ளிகள் இயக்குனரகம் குறிப்பிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.