பட்டுப்போன மரம் வெட்டி அகற்றம்| Dinamalar

புதுச்சேரி : புதுச்சேரி ஏ.எப்.டி., மில் எதிரே சாலையோர பட்டுப்போன மரம் வனத்துறை ஊழியர்களால் வெட்டி அகற்றப்பட்டது.புதுச்சேரி – கடலூர் மெயின் ரோடு, ஏ.எப்.டி., மில் எதிரே 60 அடி உயர முள்ள பட்டுப்போன அசோக மரம் எந்நேரமும் உடைந்து விழும் நிலையில் இருந்து வந்து.அசம்பாவிதம் நேரும் முன் இந்த மரத்தை அகற்றக் கோரி, வனத்துறை அதிகாரி சத்தியமூர்த்தியிடம், பா.ஜ., மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிச்செல்வம் மனு அளித்தார்.அதன்பேரில், வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் பட்டுபோன மரத்தை இயந்திரங்களை கொண்டு வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.