பத்ம விருது பெற்ற சந்தூர் இசைக்கலைஞர் காலமானார்| Dinamalar

புதுடில்லி: பிரபல ‘சந்துார்’ இசைக் கலைஞர் பஹாஜன் ஷோபாரி, 73 உடல் நலக்குறைவால் காலமானார். பாரம்பரிய இசைக்கருவியான சந்தூர் இசைக்கருவி வாசிப்பதில் வல்லவரான பஹாஜன் ஷோபாரி என்ற இசைக்கலைஞர், வயது முதுமை காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அரியானா மாநிலம் குர்கிராமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார்.

1999-ல் சங்கீத நாடக் அகாடமி விருது, 2004-ல் பத்மஸ்ரீ ஆகிய விருதுகளையும், காஷ்மீர், மாநிலத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றுள்ளார். இவருக்கு மனைவியும், இரு மகன்களும் உள்ளனர்.

கடந்த மே மாதம் மும்பையைச் சேர்ந்த பிரபல ‘சந்துார்’ இசைக் கலைஞர் ஷிவ்குமார் ஷர்மா, 84, மாரடைப்பால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.