கர்நாடகாவில் பேருந்து- சரக்கு வாகனம் மோதி பயங்கர தீ விபத்து: 7 பேர் பலி ?

கோவாவில் இருந்து ஐதராபாத்தை நோக்கி 29 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. கர்நாடகா மாநிலம் கலபுர்கியில் உள்ள கமலாபுரா அருகே இன்று அதிகாலை பேருந்து சென்றுக் கொண்டிருந்தபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் மீது பயங்கரமாக மோதியது.

இதில், பேருந்து தீ பிடித்து மளமளவென பரவியது. பயணிகள் தங்களின் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பலத்த காயங்களுடன் பேருந்தில் இருந்து தப்பிக்க முயன்றனர்.

இந்த விபத்தில் 22 பேர் பேருந்தில் இருந்து தப்பியதாகவும், 7 பேர் பலியாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சரக்கு வாகன ஓட்டுனரும் பலத்த காயமடைந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்தவர்கள் கலபுர்கியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்..
உத்தரபிரதேசத்தில் ரூ.80 ஆயிரம் கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.