வரும் 13ல் ஆஜராக ராகுலுக்கு சம்மன்| Dinamalar

புதுடில்லி: பணமோசடி வழக்கில் நேரில் ஆஜராக காங்கிரஸ் எம்.பி., ராகுல் அவகாசம் கேட்ட நிலையில், வரும் 13ம் தேதி ஆஜராக வேண்டும் என அவருக்கு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

‘ஹெரால்டு’ பத்திரிகை பங்கு பரிவர்த்தனை முறைகேடு தொடர்பான வழக்கில் ஆஜராகும்படி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா மற்றும் அவரது மகனும் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் ஆகியோருக்கு, மத்திய அமலாக்கத் துறை அதிரடியாக சம்மன் அனுப்பியுள்ளது.
இதில், வரும் 8ம் தேதி ஆஜராகும்படி சோனியாவுக்கும், அதற்கு முன்பாக ஆஜராகும்படி ராகுலுக்கும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், வெளிநாட்டில் உள்ளதால், விசாரணையை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என ராகுல் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், வரும் 13ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று ராகுலுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.