இந்தியாவில் மதசுதந்திரம் பற்றிய அமெரிக்காவின் விமர்சனத்துக்கு மத்திய அரசு பதில்..!

இந்தியாவில் மத சுதந்திரம் பற்றிய அமெரிக்காவின் விமர்சனத்துக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை மதச்சுதந்திரம் தொடர்பாக வெளியிட்ட ஆண்டறிக்கையில், இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் நடைபெறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி , அமெரிக்காவின் அறிக்கையில் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறினார்.

இது போன்ற பாரபட்சமான பார்வைகளைத் தவிர்க்குமாறும் அவர் வலியுறுத்தினார். இந்தியாவில் மத சுதந்திரத்துக்கும் மனித உரிமைகளுக்கும் மதிப்பளிக்கப்படுவதாக அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.