உ.பி.,யில் சிறுமிக்கு குரங்கு அம்மை பரிசோதனை| Dinamalar

லக்னோ: உ.பி.,யை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு குரங்கு அம்மை நோய்க்கான லேசான அறிகுறிகள் தென்பட்டது. இதனை தொடர்ந்து அச்சிறுமிக்கு பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

உலக நாடுகளில் குரங்கு அம்மை பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில், யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி உள்ளது.

இந்நிலையில் உ.பி.,யில் 5 வயது சிறுமிக்கு உடல் முழுவதும் எரிச்சல் ஏற்பட்டதுடன் தழும்புகள் தோன்றியுள்ளது. இதனையடுத்து இது குரங்கு அம்மை அறிகுறியாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதை தவிர, வேறு எந்த அறிகுறிகளும் சிறுமிக்கு ஏற்படவில்லை. கடந்த ஒரு மாதத்தில், வெளிநாட்டில் இருந்து வந்த யாரையும் சிறுமி சந்திக்கவில்லை. தற்காப்பு நடவடிக்கையாக அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.