புல்லட் ரயில் விபத்துடிரைவர் பரிதாப பலி| Dinamalar

பீஜிங்:சீனாவில், ‘புல்லட்’ எனப்படும், அதிவேக ரயில் தடம் புரண்டதில் டிரைவர் உயிரிழந்தார். ஏழு பயணியர் காயம் அடைந்தனர்.
நம் அண்டை நாடான சீனாவின் தென்மேற்கில் உள்ள குய்சோ மாகாணத்தில் இருந்து, குவாங்சோ மாகாணத்துக்கு அதிவேக புல்லட் ரயில் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. ரோங்ஜியாங் ரயில் நிலையத்தில் திடீரென ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ரயில் தடம் புரண்டது. இந்த விபத்தில் ரயில் டிரைவர் உயிரிழந்தார். காயம் அடைந்த ஏழு பயணியர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ரயிலில் இருந்த 136 பயணியர் பத்திரமாக மீட்கப்பட்டனர். விசாரணை நடக்கிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.