அமெரிக்க அதிபரை பதறவிட்ட விமானம் – பாதுகாப்பு அதிகாரிகள் ஷாக்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஓய்வெடுத்த கடற்கரை பங்களா மீது, அத்துமீறி விமானம் பறந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வார இறுதி நாளான சனிக்கிழமை மத்திய அட்லாண்டிக் கடற்கரையை ஒட்டியுள்ள டேலேவேர் பகுதியில் உள்ள ஒரு சொகுசு பங்களாவில் தனது மனைவியுடன் தங்கி இருந்தார். அதிபர் ஜோ பைடன் தங்கி இருந்ததால் அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.

இத்தகைய பாதுகாப்புகளையும் மீறி, அதிபர் ஜோ பைடன் தங்கியிருந்த பங்களா மீது விமானம் ஒன்று அத்துமீறி பறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, உடனடியாக ரேஹோபோத் கடற்கரையில் உள்ள பாதுகாப்பான இல்லத்திற்கு அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி அழைத்து செல்லப்பட்டனர்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள வெள்ளை மாளிகை, “இந்த விவகாரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதிபரின் பாதுகாப்புக்கோ அவரது குடும்ப உறுப்பினர்கள் பாதுகாப்புக்கோ எந்த அச்சுறுத்தலும் இல்லை” என்று தெரிவித்து உள்ளது.

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – விரைவில் வெளியாகும் குட் நியூஸ்!

இதனைத் தொடர்ந்து அமெரிக்க ரகசிய பாதுகாப்பு சேவை வெளியிட்டுள்ள அறிக்கையில், வான்பரப்பிற்கு நுழைந்த விமானம் உடனடியாக பறக்க தடை விதிக்கப்பட்ட வான்பரப்பில் இருந்து அழைத்து செல்லப்பட்டதாகவும், தவறுதலாக விமானம் பாதுகாப்பு பகுதிக்குள் நுழைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளது. அத்துடன் இது தொடர்பாக விமானியிடன் முதற்கட்ட விசாரணை நடத்தி வருவதாகவும், அவற்றில் விமானிக்கு போதுமான வானொலி சிக்னல்கள் கிடைக்கப் பெறவில்லை மற்றும் வெளியிடப்பட்ட விமான வழிகாட்டுதலைகளை விமானி பின்பற்றவில்லை என தெரிவித்துள்ளது.

பொதுவாக அமெரிக்க அதிபர் வாஷிங்டனுக்கு வெளியே சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் பிற விமானங்களுக்கான வழிகாட்டுதல் அட்டவணையை ஒருவாரத்திற்கு முன் வெளியிடும். அதன் அடிப்படையில், அமெரிக்க அதிபர் இருக்கும் 10 மைல்கள் தூரம் பறக்க தடை விதிக்கப்பட்ட பகுதியாகவும், 30 மைல்கள் தூரம் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.