பொதுமக்களை நோக்கி காவலர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு.. 5 நிமிடம் நடந்த இச்சம்பவத்தில் காவலர் உள்பட இருவர் உயிரிழப்பு..!

மேற்கு வங்கத்தில் உள்ள வங்கதேச தூதரகத்துக்கு வெளியே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர், மக்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தானும் சுட்டு தற்கொலை செய்தார்.

இதில், இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த பெண் ஒருவரும் உயிரிழந்தார். தோட்டாக்கள் பாய்ந்து படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தாக்குதல் நடத்திய காவலர், மன உளைச்சலில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.