அமெரிக்காவில் மூன்று பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை| Dinamalar

ஸ்மித்ஸ்பர்க்: அமெரிக்காவில், மூவரை சுட்டுக் கொன்று தப்ப முயன்றவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவில் மேரிலாண்டு மாகாணத்திலிருக்கும் ஸ்மத்ஸ்பர்க் நகரில் உள்ள ஒரு தொழில் நிறுவனத்தில் புகுந்த ஒருவர், அங்கிருந்தோரை சரமாரியாக சுட்டுள்ளார். அதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.இதையடுத்து வெளியே வந்த கொலையாளி ஒரு வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அப்போது அவ்வழியே வந்த போலீஸ்காரர், தப்பிச் செல்ல முயன்றவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். கொலையாளியும் திருப்பி சுட்டுள்ளனர்.

இதில், இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்திய வருகின்றனர். அமெரிக்காவில் சமீபத்தில் அடுத்தடுத்து மூன்று துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்திருப்பது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.