`சோழர், பாண்டியர், பல்லவர்கள் குறித்து வரலாற்று ஆசிரியர்கள் கவனம் செலுத்தாதது ஏன்?' -அமித் ஷா கேள்வி

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “இந்தியாவில் பல்வேறு மன்னர்கள் ஆட்சி புரிந்துள்ளனர். ஆனால் இந்தியாவில் உள்ள பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் முகலாயர்களின் வரலாற்றை மட்டுமே பதிவு செய்வதில் முக்கியத்துவம் அளித்துள்ளனர்.

பாண்டிய மன்னர்கள் 800 ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளனர். அஸ்ஸாமை சேர்ந்த அஹோம் பேரரசு 650 ஆண்டுகளும் , பல்லவர்கள் 600 ஆண்டுகளும், சோழர்கள் 600 ஆண்டுகளும் நாட்டை ஆட்சி செய்துள்ளனர். ஆப்கானிஸ்தான் முதல் இலங்கை வரை மவுரிய பேரரசு 550 ஆண்டுகள் ஆட்சி நடத்தியுள்ளது. சத்வாகனர்கள் 500 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். குப்தர்கள் 400 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.

அமித் ஷா

இனி வரும் காலத்தில், இவர்கள் குறித்து அதிக புத்தகங்களை எழுத வேண்டும். அவ்வாறு புத்தகங்கள் எழுதப்பட்டால் தான் , நாம் நம்பி கொண்டிருக்கும் பல வரலாறுகள் தவறு என்பது புரியும். உண்மைகள் வெளிப்படும்.

வரலாறு என்பது வெற்றி, தோல்வியின் அடிப்படையில் எழுதப்படவில்லை. அது ஒரு நிகழ்வின் முடிவின் அடிப்படையில் எழுதப்பட்டது. அரசு மற்றும் புத்தகங்களின் அடிப்படையில் வரலாறு படைக்கப்படுவதில்லை, உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. உண்மையை எழுதுவதை யாராலும் தடுக்க முடியாது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.