திருமணமான ஏழே மாதத்தில் இளம்பெண் தற்கொலை.. காவல்துறையினர் விசாரணை..!

திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூடலூர் 4-வது வார்டு மூனுசாமி கோவில்தெருவை சேர்ந்தவர்  ரவிகுமார். இவருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அர்ச்சனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. அர்ச்சனாவிற்கு உடல்நிலை சரியில்லை என கூறப்படுகிறது.  அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு ரவிக்குமார் அழைத்து சென்றார்.

ஆனால், அவரை ரவிக்குமார் வீட்டிற்கு அழைத்து வரவில்லை என கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த அர்ச்சனா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.