மாணவியின் ஆபாச படத்தை வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் வைத்த அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது..!

கர்நாடகா மாநிலம் பெலகாவியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துடன், ஆபாச படத்தையும் வாட்ஸ்-அப் ஸ்டேட்டசாக வைத்த ஆசிரியரை, மாணவியின் உறவினர்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

எக்குந்தி கிராம அரசு உயர்நிலைப் பள்ளியில் மகேஷ் சிவலிங்கப்பா பிரதாரா என்பவர் உடற்கல்வி ஆசிரியராக உள்ளார்.

மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததுடன், ஆபாசமாக படங்களும் எடுத்து வைத்ததாக சொல்லப்படுகிறது.

அந்த மாணவிக்கு, வேறொருவருடன் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் மாணவியின் ஆபாச படத்தை பதிவிட்டதால், திருமணம் தடைப்பட்டு போனது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.