வேறொரு பெண்ணுடன் காதலன் இருந்ததால் ஆத்திரம்.. காரை ஏற்றி கதையை முடித்த காதலி..

அமெரிக்காவில் தனது காதலனை ஆப்பிள் ஏர்டேக் கருவி மூலம் பின்தொடர்ந்து கண்காணித்த காதலி, அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை அறிந்ததை அடுத்து கார் ஏற்றி கொலை செய்துள்ளார்.

இண்டியானாபோலிசை சேர்ந்த 26 வயதான கெய்லின் மோரிஸ் என்ற பெண் ஆண்ட்ரே ஸ்மித் என்பவரை காதலித்து வந்த நிலையில், அவர் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக கெய்லினுக்கு சந்தேகம் வந்துள்ளது. இதையடுத்து காதலன் செல்லும் இடங்களை அறிய ஏர்டேக் கருவியை அவர் பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், மதுபானக் விடுதி ஒன்றில் காதலன் இருப்பதை அறிந்த அப்பெண், அங்கு நுழைந்ததும் வேறு ஒரு பெண்ணுடன் அவர் பேசிக் கொண்டிருப்பதை அறிந்தார்.

இதனால், ஆத்திரமுற்ற காதலி, அங்கு வாக்குவாதம் செய்தபின், காதலன் பாரை விட்டு வெளியே வந்தபோது காரை வேகமாக இயக்கி கொலை செய்தார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.