தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜூன் 13 முதல் 16 வரை தமிழகம், புதுச்சேரியில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

சென்னையில் அடுத்த இரு நாட்களில் ஒருசில பகுதிகளில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிக அளவாக நீலகிரி மாவட்டம் செருமுள்ளியில் 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.