கொதிக்கும் எண்ணெயில் விழுந்த குழந்தை உயிரிழப்பு… காஞ்சிபுரம் அருகே நிகழ்ந்த அவலம்..!

கொதிக்கும் எண்ணெயில் விழுந்து குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், பால்நல்லூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பவித்ரா என்ற மகளும் உள்ளனர். சம்பவதன்று, அவரின் வீட்டில் முறுக்கு செய்து கொண்டனர். முறுக்கு எண்ணெயை வீட்டில் வெளியில் வைத்திருந்தனர்.

அப்போது, விளையாயடி கொண்டிருந்த பவித்ரா எதிர்பாராத விதமாக தவறி விழுந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொதிக்கும் எண்ணெயில் விழுந்து குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.