நாகப்பட்டினத்தில், 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த விசாரணை கைதி ஒருவர் உயிரிழப்பு

நாகை அரசு மருத்துவமனையில் 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த விசாரணைக் கைதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பெண் ஒருவர் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட சிவசுப்பிரமணியன் என்பவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

நாகப்பட்டினம் மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த சிவசுப்பிரமணியனுக்கு வெள்ளிக்கிழமை உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

அன்றைய தினமே நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 4 நாட்களாக அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து வெளிப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.