Tamil news today live : அரசு பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை துவக்கி வைத்தார் முதலமைச்சர்

பெட்ரோல்- டீசல் விலை

சென்னையில் 22வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை . பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அணை நீர்மட்டம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் – 82.67 அடி, நீர் இருப்பு – 17.1 டிஎம்சி, நீர்வரத்து – 361 கனஅடி, நீர் வெளியேற்றம் – 1,005 கன அடி.

போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு

காங்கிரஸ் தலைமை அலுவலகம் முதல் அமலாக்கத்துறை அலுவலகம் வரை பேரணி நடத்த காங்கிரஸ் கட்சிக்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக ராகுல் காந்தி ஆஜராகும்போது பேரணி நடத்தபோவதாக காங்கிரஸ் தலைமை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடதக்கது.

டெல்லியில் போராட்டம் நடத்த திரண்ட காங்கிரஸ் கட்சியினர் கைது

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக ராகுல் காந்தி ஆஜராகிரார். இந்நிலையில் இதை கண்டித்து அக்கட்சியினர் டெல்லியில் இன்று போராட்டம் நடத்தினர். இதனால் அவர்களை டெல்லி காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர்.  

Live Updates
10:22 (IST) 13 Jun 2022
அரசு பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம் துவக்கம்

1-3 வகுப்பு மாணவர்கள் எளிய முறையில் கற்க எண்ணும் எழுத்தும் திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைத்தார். இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ், லியோனி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். திருவள்ளூர் அழிச்சிவாக்கம் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் இத்திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைத்தார்

08:55 (IST) 13 Jun 2022
கல்விச் சாலைகளில் அறிவு ஒளி வீசட்டும் – முதலமைச்சர் ட்வீட்

”இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன்.கொரோனா என்ற பெருந்தொற்றால் பள்ளிக்கு நேரில் வந்து பயிலும் முறை தடைபட்டது. இருந்தாலும் ஆன்லைன் மூலமாகக் கல்வி கற்றீர்கள். அதேபோல் இருபால் ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகளை நோக்கிப் பிள்ளைகள் வருகிறார்கள். அவர்களைக் கனிவுடன் வரவேற்று அரவணைப்புடன் பாடங்களைக் கற்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். தடைபட்ட கல்வியைத் தாராளமாக வழங்கி முழுமைப்படுத்த வேண்டிய முழுப்பொறுப்பும் உங்கள் கைகளில்தான் இருக்கிறது. கல்விச் சாலைகளில் அறிவு ஒளி வீசட்டும்! மாநிலம் பயன்பெறட்டும்! ” என்று முதலமைச்சர் ட்வீட்

08:50 (IST) 13 Jun 2022
பள்ளிகள் இன்று திறப்பு

கோடைவிடுமுறை முடிந்து 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ளது. அரசு பள்ளிகளில் இன்று முதலே பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகம் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் கடைபிடிக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.