பதுளை மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு தீயணைப்பு பயிற்சி

பதுளை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினரின் அனுசரணையுடன் நடத்தப்படும் தீயை அணைக்கும் பயிற்சி நிகழ்ச்சி நேற்று (22) மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

பதுளை மாவட்டச் செயலகக் கட்டடத்தின் வளாகத்திலும் அதனைச் சூழவுள்ள இடங்களிலும் ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் அதனைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான பயிற்சிகளையும் அறிவையும் பதுளை மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் உட்பட ஊழியர்களுக்கு வழங்குவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

பதுளை மாவட்ட செயலாளர் தமயந்தி பரணகம, மேலதிக மாவட்ட செயலாளர் கே.பி.ஏ.எம்.எஸ்.அபேகோன், பதுளை பிரதேச செயலாளர் ஹேமந்த திஸாநாயக்க மற்றும் பணியாளர்கள் உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் பலர் இப்பயிற்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

உதவிப் பணிப்பாளர் ஈ.எம்.எல்.உதய குமாரவின் வழிகாட்டலின் கீழ் பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.