மரடோனா மரணத்தில் சர்ச்சை… விசாரணை வளையத்துக்குள் அவரின் குடும்ப மருத்துவர்!

உலக புகழ்பெற்ற பிரபல கால்பந்து வீரரான டியாகோ மரடோனா கடந்த 2020ம் ஆண்டு மரணம் அடைந்தார். மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், இரண்டு வாரங்களுக்குப் பிறகு, இதய செயலிழப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக மரடோனாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவரது மரணம் அர்ஜென்டினா நாட்டு ரசிகர்களை மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலக கால்பந்து ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அத்துடன் அவரின் மரணத்தில் சர்ச்சைகளும் நிலவி வந்தன. மருத்துவர்களின் அலட்சியத்தால் மரடோனா உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் தற்போது மரடோனாவின் குடும்ப மருத்துவரும், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான லியோபோல்டோ லுக், மனநல மருத்துவர் அகஸ்டினா கோசாச்சோவ், செவிலியர்கள் என மொத்தம் 8 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அர்ஜென்டினா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வாஷிங்டனில் அதிர்ச்சி சம்பவம்… இசை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு!

மருத்துவக் குழுவினரின் கவனக்குறைவு காரணமாகவே மரடோனா உயிரிழந்ததாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்ததை அடுத்து மருத்துவர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளனர். விசாரணை தேதி இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு குறைந்தபட்டம் 8 முதல் 25 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.