Cryptocurrency: சுமார் ரூ.1000 கோடியை இழந்த இந்திய முதலீட்டாளர்கள் – பெரும் கிரிப்டோகரன்சி மோசடி அம்பலம்!

Cryptocurrency frauds in india: சைபர் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சைபர் கிரைம் குற்றவாளிகள் மக்களை ஏமாற்ற புதிய வழிகளைத் தேடி அலைகின்றனர்.

கிரிப்டோகரன்சி பிரபலமடைந்த பிறகு, சைபர் குற்றங்களை செய்பவர்கள் இப்போது டிஜிட்டல் கரன்சி தொடர்பான மோசடிகளைச் செய்கின்றனர். இதற்கு முன்பும் ஏராளமான கிரிப்டோகரன்சி மோசடிகள் நடந்துள்ளன. ஆனால், இதுபோல இருந்ததில்லை என்று கூறப்படுகிறது.

தற்போது, இந்திய முதலீட்டாளர்கள் ரூ.1000 கோடிக்கு மேல் இழந்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. சைபர் செக்யூரிட்டி நிறுவனமான CloudSEK, தற்போது செயலில் உள்ள சிறந்த ஆண்ட்ராய்டு போலி கிரிப்டோ ஆப்பையும் அதன் ஃபிஷிங் டொமைனை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Nothing Phone (1): நத்திங் போன் (1) வாங்கலாம் – ஆனா இப்டி பண்ணா மட்டும் தான் முடியும்!

இந்த மோசடியின் கீழ், போலி கிரிப்டோ பரிமாற்றங்கள் என்ற போர்வையில் மக்கள் ஏமாற்றப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த Crypto Scam குறித்து மேலதிக தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

CoinEgg என்ற பெயரில் கிரிப்டோ மோசடி நடக்கிறது

CoinEgg என்பது இங்கிலாந்தில் கிடைக்கும் கிரிப்டோ வர்த்தக தளமாகும். சைபர் குற்றவாளி அதே பெயரில் போலி இணையதளத்தை உருவாக்கியுள்ளார். இந்த போலி இணையதளம் மிகவும் உண்மையானது போலவே காட்சியளிக்கிறது.

Cloud SEK அறிக்கையின்படி, “இது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் டாஷ்போர்டு மற்றும் பயனர் இண்டர்ஃபேஸை நகலெடுக்கிறது. இது தன்னை CoinEgg கிரிப்டோ வர்த்தக தளமாகக் காட்டுகிறது.

Telecom: மாதத்திற்கு வெறும் 19 ரூபாய் போதும்… BSNL சிம் கார்டை ஆக்டிவாக வைத்திருக்கலாம்!

மோசடி செய்பவர்கள் பேஸ்புக், டெலிகிராம் போன்ற சமூக வலைப்பின்னல்கள் மூலம் போலி பரிமாற்றத்தை ஊக்குவிக்கின்றனர். இந்த போலி தளத்திற்கு பயனர்களை கொண்டு வருவதற்காக பரிசு கூப்பன்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மோசடி செய்யப்பட்ட கோடிக் கணக்கிலான பணம்

பல பயனர்கள் இந்த போலி பரிமாற்றங்களில் கணக்குகளை உருவாக்குகின்றனர். வர்த்தகம் செய்ய, பயனர்கள் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும். இப்படி செய்யும்போது தான் மோசடி பேர்வழிகள் தங்கள் கைவரிசையை காட்டுகின்றனர்.

கணக்கில் போடப்பட்ட பணம் முழுவதுமாக முடக்கப்படுகிறது. இதற்குப் பிறகு, கணக்கு முடக்கம் குறித்து பயனர்கள் புகார் கூறும்போது, ஹேக்கர்கள் அவர்களின் அடையாள அட்டை, பிற வங்கி விவரங்களை மின்னஞ்சல் மூலம் கோருகின்றனர்.

Telegram Premium: கூடுதல் அம்சங்கள் வேண்டுமா; பணத்த கட்டு – ஸ்டிரிக்ட் ஆர்டர் போட்ட டெலிகிராம்!

பயனர்கள் உண்மையான பரிமாற்றம் என்று நினைத்து வாடிக்கையாளர் ஆதரவுக்காக முழுமையான தகவலையும் வழங்குகிறார்கள். CloudSEK இன் வெளியிட்ட தரவுகளின்படி, கிரிப்டோ ஸ்கேம் வலையில் சிக்கிய ஒரு நபர் மட்டும், போலி கிரிப்டோகரன்சி பரிமாற்ற மோசடியில் பயனர் சுமார் ரூ.50 லட்சத்தை இழந்துள்ளார் என்று கூறுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.