அவுஸ்திரேலியாவின் சிட்னியிலும் அடைமழை

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் அடைமழை பெய்து வருவதனால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சிட்னியிலுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் குடியிருப்புகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

வெள்ளப்பெருக்கினால் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதேவேளை எதிர்வரும் சில தினங்களில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் தீவிரமடையலாமென அவுஸ்திரேலிய வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அனர்த்த நிலை மேலும் உக்கிரமடையுமிடத்து மக்கள் குடியிருப்புகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுவதற்குத் தயாராக இருக்க வேண்டுமென்றும் அதிகாரிகள் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.