பேருந்து நிலையத்தில் இளம்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டவர்களை விசாரிக்க வந்த காவலரை தாக்கிய 3 பேர் கைது.!

சென்னை அடுத்த அம்பத்தூரில் தகராறில் ஈடுபட்டதை விசாரித்த காவலரை தாக்கி கைப்பேசியை உடைத்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

ஓரகடம் சாலையை சேர்ந்த மோனிஷ், தனியார் நிறுவன ஊழியரான அவரது தோழியை ஆபிஸ் கேப்-ல் ஏற்றி விட அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது, அவ்வழியாக காரில் வந்த 3 பேர், மதுபோதையில் இவர்களிடம் தகராறு செய்ததோடு பெண்ணிடம் வம்பு செய்துள்ளனர்.

இதுகுறித்து விசாரிக்க வந்த, ரோந்து பணியில் இருந்த காவலரையும், 3 பேர் தாக்கி கைப்பேசியை உடைத்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.