கூலி தொழிலாளியை மிரட்டி 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற காவலர் கைது..!

திருவண்ணாமலை அருகே செம்மரக் கடத்தல் வழக்குப்பதிவு செய்வதாக கூறி கூலி தொழிலாளியை மிரட்டி 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற காவலர் கைது செய்யப்பட்டார்.

ஜமுனாபுரத்தூர் காவல்நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலராக பணிபுரிந்த விஜய் என்பவர் சிந்தாலூரைச் சேர்ந்த செங்கல்சூளை கூலி தொழிலாளியான கோவிந்தராஜை மிரட்டி ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

புகாரின் பேரில் வாணாபுரம் காவல் நிலையத்திற்கு காவலர் விஜய் பணிமாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து, பணம் கேட்டு மிரட்டியதால் ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்து அனுப்பிய அதிகாரிகள் காவலர் விஜய் பெற்ற போது கையும் களவுமாக கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.