சமையல் எண்ணெயின் விலையை லிட்டருக்கு பத்து ரூபாய் குறைக்கும்படி எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரே சீரான விற்பனை விலையை நிர்ணயிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய் 60 சதவீதம் இறக்குமதி செய்யப்படுவதாகும்.
சர்வதேச விலை உயர்வை அடுத்து உள்நாட்டு சந்தையில் சமையல் எண்ணெய் விலை உயரும் நிலை ஏற்பட்டது. ஆயினும் உலகளவில் விலை வீழ்ச்சியடைந்தது.
இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்களின் அதிகாரிகளைஅழைத்து ஆலோசனை நடத்திய உணவுத்துறை செயலாளர் சுதான்ஷ் பான்டே சர்வதேச சந்தைக்கேற்ப விலையைக் குறைக்குமாறு மத்திய அரசு எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்