மூழ்கிய கப்பலில் 22 பேர் கடலோர காவல்படை மீட்பு| Dinamalar

ஆமதாபாத்: குஜராத் கடல் பகுதியில் மூழ்கிய சரக்கு கப்பலில் இருந்து, 22 பேரை, கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.

ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து, ஏராளமான பொருட்களை ஏற்றிக் கொண்டு, கர்நாடகா மாநிலம் கார்வார் பகுதிக்கு சரக்கு கப்பல் ஒன்று நேற்று காலை வந்து கொண்டிருந்தது. குஜராத்தின் போர்பந்தர் கடல் பகுதிக்கு வந்தபோது, பலத்த மழை பெய்ததால், கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதில் அந்த சரக்கு கப்பல் மூழ்கத் துவங்கியது.

இதையடுத்து போர்பந்தர் பகுதியில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிநவீன, ‘ட்ரோனியர்’ ஹெலிகாப்டரில் சென்ற கடலோர காவல் படையினர், மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்த, 22 ஊழியர்களை பத்திரமாக மீட்டு, கரைக்கு அழைத்து வந்தனர். இந்த 22 பேரில், 20 பேர் நம் நாட்டைச் சேர்ந்தவர்கள். ஒருவர் இலங்கையைச் சேர்ந்தவர். மற்றொருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.