ஆமதாபாத்: குஜராத் கடல் பகுதியில் மூழ்கிய சரக்கு கப்பலில் இருந்து, 22 பேரை, கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.
ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து, ஏராளமான பொருட்களை ஏற்றிக் கொண்டு, கர்நாடகா மாநிலம் கார்வார் பகுதிக்கு சரக்கு கப்பல் ஒன்று நேற்று காலை வந்து கொண்டிருந்தது. குஜராத்தின் போர்பந்தர் கடல் பகுதிக்கு வந்தபோது, பலத்த மழை பெய்ததால், கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதில் அந்த சரக்கு கப்பல் மூழ்கத் துவங்கியது.
இதையடுத்து போர்பந்தர் பகுதியில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிநவீன, ‘ட்ரோனியர்’ ஹெலிகாப்டரில் சென்ற கடலோர காவல் படையினர், மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்த, 22 ஊழியர்களை பத்திரமாக மீட்டு, கரைக்கு அழைத்து வந்தனர். இந்த 22 பேரில், 20 பேர் நம் நாட்டைச் சேர்ந்தவர்கள். ஒருவர் இலங்கையைச் சேர்ந்தவர். மற்றொருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்.
ஆமதாபாத்: குஜராத் கடல் பகுதியில் மூழ்கிய சரக்கு கப்பலில் இருந்து, 22 பேரை, கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர். ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து, ஏராளமான பொருட்களை ஏற்றிக் கொண்டு,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.