குழந்தை உடலோடு மழையில் 4 கி.மீ., நடந்த தந்தை: நெஞ்சை உலுக்கும் சம்பவம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பாலக்காடு : கேரளாவில் தனது நான்கு மாத குழந்தையின் உடலை நெஞ்சோடு அணைத்தபடி, பழங்குடியின தந்தையொருவர் கொட்டும் மழையில் 4 கி.மீ., துாரம் நடந்தே வீடு வந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திலிருக்கும் அட்டப்பாடி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன். பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவரது குடியிருப்பு வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது; போக்குவரத்து வசதியில்லை.

இவரது 4 மாத குழந்தை, உடல்நலக் குறைவால் உயிரிழந்தது. மாவட்ட அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பின், உடலை அய்யப்பனிடம் ஒப்படைத்தனர். அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம், தடிகூண்டு குடியிருப்பு பகுதி வரை வந்தனர். அதன்பிறகு, வாகனம் செல்ல முடியாது.

latest tamil news

இதனால், தன் சிசுவின் இறந்த உடலை நெஞ்சோடு அணைத்தபடி அய்யப்பன் நடக்கத் தொடங்கினார். பலத்த காற்று, கொட்டும் மழையில், குழந்தையின் சடலத்தைச் சுமந்தவாறே 4 கி.மீ., துாரம் நடந்து தன் குடியிருப்புக்கு வந்து சேர்ந்துள்ளார். உடன் வரும் நபர், குழந்தையின் உடல் மீது மழைத்துளி படாமல் குடைபிடித்தபடி வரும் வீடியோ வெளியாகி, மக்களின் நெஞ்சைக் கனக்க வைத்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.