டி.என்.சி. சிட்ஸ் நடத்திய வாடிக்கையாளர்கள் கூட்டம்..! சிறப்பு பட்டிமன்றம்..!

டி.என்.சி. சிட்ஸ் நிறுவனத்தின் சென்னை வாடிக்கையாளர்களின் சிறப்பு கூட்டம் மற்றும் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம், போஜராஜ்வர்மா, ஓம் சக்தி ஏஜென்சிஸ் நிறுவனர் ஆறுமுகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். டி.என்.சி. குரூப் ஆப் கம்பெனிகளின் தலைவர் டி.சி. இளங்கோவன் வாழ்த்துரை வழங்கினார்.

இவர்களுடன், டிரீம் அலையன்ஸ் மேட்ரிமோனி நிறுவனத்தின் இயக்குனர் TNT.ராஜா, டி.என்.சி. சிட்ஸ் – கிருஷ்ணகிரி மண்டல இயக்குனர் பிருதிவ்ராஜ், டி.என்.சி. சிட்ஸ் இயக்குனர் சினேகா பிரவீன், அக்கினி மலர்கள் நிறுவனர் பன்னீர்செல்வம், டி.என்.சி. சிட்ஸ் மூத்த மேம்பாட்டு அதிகாரி சுதர்சனம் ஆகியோரும் குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கிவைத்தனர்.

சிறப்பு பட்டிமன்றம்

இந்த கூட்டத்தின்போது, குடும்ப முன்னேற்றத்திற்கும், மகிழ்ச்சிக்கும் பெரிதும் துணை செய்வது கணவனே மனைவியே என்ற சிறப்பு பட்டிமன்றம் வாடிக்கையார்களை மகிழ்வித்தது. பிரபல பட்டிமன்ற பேச்சாளர் ராஜா நடுவராக வீற்றிருக்க பாரதி பாஸ்கர் மற்றும் அருள் பிரகாஷ் இருவரின் தலைமையிலான குழுவினரின் நகைச்சுவை பேச்சுடன் இந்த சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.

டி.என்.சி. சிட்ஸ் – சென்னை மண்டல நிர்வாக இயக்குனர் மற்றும் டி.என்.சி.ஃ பைனான்ஸ் நிர்வாக பங்குதாரர் கே. பார்த்திபன் வரவேற்புரை ஆற்றினார். விழாவின் முடிவில் டி.என்.சி. சிட்ஸ் சென்னை மண்டல பொது மேலாளர் நவநீத கிருஷ்ணன் நன்றி உரை ஆற்றினார்.

டி.என்.சி. சிட்ஸ்

டி.என்.சி. சிட்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் சுமார் 1500 பேர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவிற்கான நிகழ்ச்சியினை சென்னை மண்டல மேலாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.