மியான்மரில் முன்னாள் எம் பி உள்ளிட்ட நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

நம்பிடாவ்

முன்னாள் எம்பி உள்ளிட்ட நால்வருக்கு மியான்மரில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தற்போது மியான்மரில் ஆங் சான் சூச்சி தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது.. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நான்கு பேருக்குத் தூக்குத் தண்டனை மியான்மர், ராணுவத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுட்தி உள்ளது.

மரண தண்டனை நிறைவேற்றியவர்களில் சமூக செயற்பாட்டாளர் கோ ஜிம்மி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபியோ ஜெயா தாவ் ஆகிய இருவரும் அடங்குவர்.  இந்த தண்டனையை ஆங் சான் சூச்சியின் ஜனநாயகக் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது  அதே வேளையில் ராணுவம் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட நால்வரின் குடும்பத்தினர் சிறைக்கு வெளியே கூடியிருந்ததால் அங்குப் பதற்றம் நிலவியது. மியான்மர் ராணுவம் குடும்பத்தினருக்குத் தகவல் ஏதும் அளிக்காமல் தூக்குத் தண்டனையை நிறைவேற்றியதற்குஅந்நாட்டு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.