நேஷனல் ஹெரால்டு வழக்கு சோனியா காந்தியிடம் இன்று விசாரணை

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு தொடர்பான வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த வியாழன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார். டெல்லியில் உள்ள அமலாக்கலாத்துறை அலுவலகத்தில் ஆஜரான சோனியாகாந்தியிடம் சுமார் ஒரு சில மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று சோனியாகாந்தி விசாரணைக்கு நேரில் ஆஜராக உள்ளார். இதனை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே காங்கிரஸ் தலைவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த போராட்டம் நடத்துவதற்கு டெல்லி போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். எனினும் தடையை தாண்டி போராட்டத்தில் காங்கிரஸ் ஈடுபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.