மருத்துவ கல்லூரியில் மோசடி; கேரள சர்ச்சில் சோதனை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

திருவனந்தபுரம் : கேரளாவில் மருத்துவக் கல்லூரியில் ‘சீட்’ அளிப்பதாகக் கூறி, கோடிக்கணக்கான ரூபாய் பெற்ற குற்றச்சாட்டில், சி.எஸ்.ஐ., எனப்படும் தென்னிந்திய திருச்சபையில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, திருவனந்தபுரத்தில் உள்ள காரக்கோணம் பகுதியில் சி.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.இதில் மருத்துவப் படிப்பில் ‘சீட்’ தருவதாக கூறி, பலரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக புகார்கள் வந்தன.

latest tamil news

இதனடிப்படையில், நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சி.எஸ்.ஐ., தலைமையிடம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.