டெல்லியில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார் இசைஞானி இளையராஜா..!

மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசைஞானி இளையராஜா தமிழில் பதவியேற்றுக்கொண்டார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில், அந்த அவையின் துணைத் தலைவரான ஹரிவன்ஷ் நாராயண் சிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா உள்ளிட்டோர் மாநிலங்களவை எம்.பி.க்களாக அண்மையில் நியமிக்கப்பட்டனர்.

கடந்த வாரம் உறுப்பினர்களாக தேர்வானோர் பதவியேற்ற நிலையில், இளையராஜா மட்டும் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

கடவுளின் பெயரால் ஆணையிட்டு பதவியேற்பதாகக் கூறி அவர் பொறுப்பேற்றார். மாநிலங்களவை உறுப்பினர்கள் கரவொலி எழுப்பி இளையராஜாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.