பெட்ரோல் – டீசல் விலை
சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 ஆகவும், டீசல் லிட்டர் ரூ. 94.24 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மாணவி மரணம் 3 சிறப்பு தனிப்படை அமைப்பு
திருவள்ளூர் 12ம் வகுப்பு மாணவி மரணம் தொடர்பான வழக்கு விசாரணை. டிஎஸ்பி செல்வகுமார் தலைமையில் 3 சிறப்பு தனிப்படை அமைத்து சிபிசிஐடி உத்தரவு.
இபிஎஸ்-க்கு எதிரான வழக்கு இன்று விசாரணை
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஒப்பந்த முறைகேடு வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil3.
கன்னியாகுமரி வந்தடைந்தது செஸ் ஒலிம்பியாட் ஜோதி. விவேகானந்தர் மண்டபத்தில் கிராண்ட் மாஸ்டர் நிலோபத் தாஸிடம் ஒலிம்பியாட் ஜோதி ஒப்படைப்பு. அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோர் ஒப்படைத்தனர்.
மாணவி மரணம் – பிரேத பரிசோதனை தொடங்கியது. திருவள்ளூர் 12 ஆம் வகுப்பு மாணவியின் பிரேத பரிசோதனை தொடங்கியது.