இமயமலையில் 21,312 அடி உயரத்தை ஏறி 13 வயது சிறுவன் புதிய சாதனை..!

ஐதராபாத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் இமயமலை தொடர்களில் ஒன்றான லடாக்கின் மார்கா பள்ளத்தாக்கில் 21,312 அடி உயரத்திற்கு ஏறி புதிய சாதனை படைத்துள்ளான்.

9ஆம் வகுப்பு மாணவர் விஸ்வநாத் கார்த்திகே, கடந்த 9ஆம் தேதி காங் யாட்சே மற்றும் டிசோ ஜோங்கோ மலைத்தொடர்களில் ஏறும் முயற்சியில் ஈடுபட்டார்.

சுமார் 14 நாட்கள் கடின உழைப்பில், காற்றில் ஈரப்பதம் இல்லாததால் சுவாசப்பிரச்னை உள்பட பல்வேறு சிக்கல்களை சந்தித்த சிறுவன் 21,312 அடி உயரத்தை அடைந்து தேசியக் கொடியை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.