போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட, குற்றவாளி கும்பல் ஒன்றின் தலைவரான தற்போது வெளிநாட்டில் வசிக்கும், சின்னையா குணசேகரம் அதாவது கிம்புலா எலே குணா என்று அழைக்கப்படுபவரின் போதைப்பொருள் கையாட்கள் இருவர் வத்தளை பள்ளியவத்தை பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து 15 இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான 06 கிலோ 440 கிராம் கேரள கஞ்சா, 05 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக் குண்டு என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக வத்தளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.