இந்திய பெருங்கடலில் விழுந்த சீன ராக்கெட் உதிரி பாகங்கள்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பீஜிங் : நம் அண்டை நாடான சீனாவால் விண்வெளிக்கு ஏவப்பட்ட ராக்கெட்டின் உதிரி பாகங்கள், இந்திய பெருங்கடலில் நேற்று விழுந்தன.

சீனா, விண்வெளியில் ‘டியாங்காங் – -1’ என்ற ஆய்வு நிலையத்தை அமைத்து வருகிறது. இதற்கு தேவையான பொருட்களை, ‘லாங் மார்ச் 5பி’ என்ற 23 டன் எடை உடைய ராக்கெட் வாயிலாக விண்வெளிக்கு கடந்த வாரம் அனுப்பியது. இந்த ராக்கெட், செயற்கைக்கோளை நிலை நிறுத்தியது.

latest tamil news

இருப்பினும், செயற்கைக்கோள் விரும்பிய திசையில் செல்ல உதவும் ‘பூஸ்டர்’ பாகங்களும், ராக்கெட்டின் மின்னணு கழிவுகளும், புவி ஈர்ப்பு விசை காரணமாக பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக சீனா தெரிவித்தது. ராக்கெட்டின் உதிரி பாகங்கள் கட்டுப்பாடற்ற வேகத்தில் வந்து கொண்டிருப்பதாகவும், எந்த பகுதியில் விழும் என்று தெரியாது என்றும் அமெரிக்காவும் தெரிவித்தது.

பூஸ்டர் பாகங்கள் மிகப் பெரியதாக இருப்பதால், புவி மண்டலத்தில் நுழையும்போது எரிந்து சாம்பல் ஆகாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இருப்பினும், நேற்று அதிகாலை புவி மண்டலத்தில் நுழைந்ததும் பூமிக்கு எந்த சேதத்தையும் ஏற்படுத்தாத வகையில் பெரும்பாலான பகுதிகள் எரிந்து விட்டன. ராக்கெட்டின் இதர பாகங்கள், இந்திய பெருங்கடலிலும், பிலிப்பைன்ஸ் கடல் பகுதியிலும் விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.